எதிர்பாராத பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், புதிய எதிர்பார்ப்புகளுடன் பிறக்கும் இந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கடற்றொழில் சமூகம் உட்பட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மேதகு மசூத் இமாத் (H.E. Masood Imad) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (10) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாசவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பாதிக்கப்பட்ட துறைகள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின்கீழ், கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் எதிர்கொள்ளும் தொழில்சார் அபாயங்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் அண்மையில் (07) கற்பிட்டியில் நடைபெற்றது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் நாட்டின் மீன்பிடித்துறை எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகள் குறித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





