நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, கடலோரக் கடல் பகுதிகளில் காலநிலை சீரற்றதாகக் காணப்படலாம் என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், அனைத்து மீனவர்களும் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமெனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த வலியுறுத்தியுள்ளார்.
ரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடவலவ நீர்த்தேக்கத்தில் கடந்த மே 09 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் மாத்திரம் 35,000 கிலோகிராமிற்கும் அதிகமான (35,469 kg) பாரிய மீன் அறுவடை கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) அறிவித்துள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு 'டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்' (Dr. Fridtjof Nansen) ஆராய்ச்சி கப்பல் மீண்டும் இலங்கை திரும்பியதை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது அந்நாட்டின் "கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்" (Marine Mammal Protection Act - MMPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
இலங்கையின் கடற்றொழில் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி (IUU Fishing) நடவடிக்கைகளைத் தடுத்தல் குறித்து ஆராய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஏப்ரல் 27 முதல் 30 வரை இலங்கையில் விசேட ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





