
இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச மீன் ஏற்றுமதிச் சந்தையைப் பாதுகாக்கும் நோக்குடன், சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கும் ஏனைய 11 பிரதான அரச நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025.09.22 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வாழ் சூழல் அமைப்பிற்கும், உள்ளூர் மீன் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ‘ஜெயன்ட் ஸ்னேக்ஹெட்’ (Giant Snakehead) எனும் ஆக்கிரமிப்பு வெளிநாட்டு மீன் இனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்ட "தெதுரு ஓயா மீன்பிடிப் போட்டி 2025", சனிக்கிழமை (செப்டம்பர் 20) தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மிகவும் வெற்றிகரமாக நிறைவுற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் கீழ் செயற்படும் கடற்றொழில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தேசிய மட்டத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் ஒரு விசேட கலந்துரையாடல் இன்று (22) கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மூன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ விமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் 2025.09.18 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சமீபத்திய செய்திகள்
- අගය එකතු කළ මත්ස්ය අපනයනය සඳහා චීන තාක්ෂණික සහය: නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ෂෙන්සෙන් නියෝජිතයින් හමුවෙයි
- ගංවතුරෙන් විපතට පත් ධීවර සංස්ථා සේවකයින්ට සහ යටිතල පහසුකම් සඳහා කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් නියෝග
- ගංවතුරෙන් මත්ස්ය සැකසුම් කර්මාන්තශාලා 15කට හානි: අපනයනකරුවන්ට කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් පොරොන්දුවක්
- யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்
- பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் வழிநடத்தலில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மீன்பிடிப் படகுகள் உடனடியாக அனுப்பி வைப்பு!





