en banner

South Program1‘முழு ‘நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமான "போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்" கீழ், போதைப்பொருள் கடத்தலுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களினால் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விரிவான விழிப்புணர்வுத் தொடர் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

CFC 1இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் நோக்கிலும், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு சலுகை விலையில் மீன் உற்பத்திகளை வழங்குவதை இலக்காகக் கொண்டும் விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (06) மீன்பிடிக் கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்றது.

Ministerஉலகில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

 DSC6075.jpgவளைகுடா பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலை கருத்திற்கொண்டு, சர்வதேச கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் எமது நாட்டின் பலநாள் மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்புத் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube