
கடற்றொழில் திணைக்களத்தினால் மீன் எற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கல், ஏனைய மீன்பிடி உற்பத்தி ஏற்றுமதியின்போதும் மற்றும் இறக்குமதியின்போதும் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கும் வழங்கப்படும் VMS தொழில்நுட்பம் அடங்கலாக ஏனைய அனுமதிப் பத்திரங்களுக்கும் பணம் செலுத்தும் நடவடிக்கை இதன் பின்னர் இலங்கை வங்கியுடன் இணைந்து இணையதளத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வைபவம் 2023.06.16ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமீபத்தில் சிலாபம் கடனீரேரியை அவதானிப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தோன்றியுள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் 2023.06.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையேயான சந்திப்பு இன்று (24.05.2023) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பேலியகொடை மத்திய மீன் சந்தைக்கு 50 கிலோ ஐஸ் கட்டியொன்றை 500 ரூபாவிற்கு விநியோகிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐஸ் உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியூள்ளார்.

சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று (23.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
சமீபத்திய செய்திகள்
- பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை
- ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையில் சந்திப்பு: வட மாகாண அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திட்டங்கள் குறித்து விசேட கவனம்
- கடல்சார் தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிலையான கடல் அபிவிருத்திக்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
- கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க முறையான எரிபொருள் முகாமைத்துவத் திட்டம் நடைமுறைக்கு
- பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன: 10 புதிய அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமனக் கடிதங்களை வழங்கினார்





