
கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் மீனவ மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட மீனவ மகா சம்மேளனம் கடந்த காலத்தில் செயற்படாத நிலையில் இருந்ததுடன், தற்போதைய கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றதுடன் தேசிய மீனவர் மகா சம்மேளனத்துக்குப் புதிய உயிரோட்டத்தை ஏற்படுத்த அதற்கு பிரதான செயலாளர் நாயகமாக அமைச்சின் ஊடக செயலாளர் திரு. நெல்சன் எதிரிசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதிலும் பரந்திருக்கும் கிராமிய சங்கங்களை ஒன்றிணைத்து அவர்களின் பிரச்சனைகளை இனம் கண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தமது அமைச்சுக்குரிய நிறுவனத்துக்கு உயர் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
வரலாற்றில் அதிகாரத்துக்குட்பட்ட தலைவர்கள் கடற்றொழில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி அவர்கள், ஏமாற்றப்படுவதாகவும், கடற்றொழில் மக்களை மேலும் ஏமாற்ற வேண்டாமென கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்கள் கூறினார்.

கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (நாரா) புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு துஷாரா சமிந்த லொக்குகுமார அவர்கள் 2020.01.30ஆந் திகதி முற்பகல் சுபநேரத்தில் தமது பதவிக்குரிய கடமைகளை ஆரம்பித்தார்.
கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் சம்பந்தமான அமைச்சு மேற்கொள்ளப்படும் வாழ்வு (Blue SDG) அளித்தல் 14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கம் சம்பந்தமான பிராந்திய மாநாடு
சமீபத்திய செய்திகள்
- தென் கரையோரப் பிரதேசம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு: கடற்றொழில் அமைச்சினால் விரிவான விழிப்புணர்வு
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் புதிய பாதையில்; புத்தாண்டுக்கு சலுகை விலையில் மீன் வழங்க நடவடிக்கை
- சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வழிகாட்டுதல்கள் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்
- சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அமைச்சின் விசேட அறிவிப்பு
- "மீன்பிடித் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெரும் நிதி; அதிகபட்ச வினைத்திறனுடன் பணியாற்றுங்கள்" - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்





