மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
திருகோணமலை உட்பட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பல மீனவ சங்கங்கள் வேதனையடைவதுடன், அதனை நிறுத்துவதற்கு எடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையில் 2023.07.26ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.

கடற்றொழில் திணைக்களத்தினால் மீன் எற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கல், ஏனைய மீன்பிடி உற்பத்தி ஏற்றுமதியின்போதும் மற்றும் இறக்குமதியின்போதும் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கும் வழங்கப்படும் VMS தொழில்நுட்பம் அடங்கலாக ஏனைய அனுமதிப் பத்திரங்களுக்கும் பணம் செலுத்தும் நடவடிக்கை இதன் பின்னர் இலங்கை வங்கியுடன் இணைந்து இணையதளத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வைபவம் 2023.06.16ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் டிஜிடல்மயமாக்கும் முதற் கட்டமாக வாடிக்கையாளர்கள் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறையின் அறிமுகம் 2023 ஜூன் மாதம் 13ஆந் திகதி கம்பஹா கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலைய வளாகத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமீபத்தில் சிலாபம் கடனீரேரியை அவதானிப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தோன்றியுள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் 2023.06.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- மாலைதீவு கடல் எல்லையை கடக்கும் பலநாள் மீன்பிடி கலன்களுக்கு கடும் சட்டங்கள்: விதிமுறைகளை மீறுவோருக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும் அபாயம்
- நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு நிறுவனம் இலங்கையின் மீன் பதப்படுத்தும் துறையுடன் இணைந்து செயற்பட ஆர்வம்
- சவால்களை வென்றெடுத்த பெருமைக்குரிய கடற்றொழில் சமூகத்திற்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
- கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்





