
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமீபத்தில் சிலாபம் கடனீரேரியை அவதானிப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தோன்றியுள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் 2023.06.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
பேலியகொடை மத்திய மீன் சந்தைக்கு 50 கிலோ ஐஸ் கட்டியொன்றை 500 ரூபாவிற்கு விநியோகிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐஸ் உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியூள்ளார்.

சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று (23.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையேயான சந்திப்பு இன்று (24.05.2023) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிலாபம் களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துரைத்தனர்.
சமீபத்திய செய்திகள்
- உடவலவ நீர்த்தேக்கத்தில் இரண்டு நாட்களில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள சாதனை அளவிலான நன்னீர் மீன் அறுவடை!
- அமெரிக்காவிற்கான மீன் ஏற்றுமதித் தடைகள் நீக்கம்: இலங்கையின் நண்டு ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் NOAA நிறுவனம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியது
- கடற்றொழில் துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தரவுகளுடன் 'டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்' ஆராய்ச்சி கப்பலின் பயணம் வெற்றிகரமாக நிறைவு
- இலங்கையின் கடற்றொழில் துறையை சர்வதேச தரத்திற்கு அமைவாக மேம்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட ஆய்வு வெற்றிகரமாக நிறைவு
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி





