
வட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு 2024இன் வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு பணம் ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

தேசிய ரின் மீன் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசின் மூலமாக தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிலாபம் மஹவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள PRF பூட் தனியார் கம்பனியை 2024.01.26ஆந் திகதி கண்காணிக்கச் சென்றபோது இவ்வாறு தெரிவித்தார்.

தமது பொழுதுபோக்குக்காக அரசியல் செய்யவில்லை எனவூம்இ நாட்டின் தற்போதைய நிலையை உணர்ந்துஇ வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கு ஜனாதிபதி அவர்கள் அரசை வழி நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்இ 2024.01.17ஆந் திகதி கிளிநொச்சியில் நன்னீர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

மீனவர்களினால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக முன்வைக்கும் பிரதான பிரச்சனை எரிபொருள் பற்றியதாகும். வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்வது மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 26.01.2024ஆந் திகதி வெள்ளமங்கரையில் மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2024.01.14ஆந் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





