அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து பலநாள் மீன்பிடிக் கலன்களும், மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) கடக்கும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நார்வேயின் பேர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு, நீரியல் வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் நிறுவனமான லெரோய் (Lerøy Seafood Group) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹெனிங் பெல்டெஸ்டாட் (Henning Beltestad) அவர்களை நேற்று (17) சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
எதிர்பாராத பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், புதிய எதிர்பார்ப்புகளுடன் பிறக்கும் இந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கடற்றொழில் சமூகம் உட்பட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு எமது கலாசார அடையாளத்தையும் தேசிய சகோதரத்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றும் ஒரு உன்னதமான சந்தர்ப்பமாகும். நீலக்கடலோடு போராடி தேசிய பொருளாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் முன்னோடிகளாக விளங்கும் எமது கடற்றொழில் சமூகத்திற்கு, இந்த மாறுதல் காலம் உண்மையிலேயே புதிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுவரும் ஒரு காலப்பகுதியாக அமையும் என நான் நம்புகிறேன்.
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மேதகு மசூத் இமாத் (H.E. Masood Imad) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (10) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாசவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
சமீபத்திய செய்திகள்
- மாலைதீவு கடல் எல்லையை கடக்கும் பலநாள் மீன்பிடி கலன்களுக்கு கடும் சட்டங்கள்: விதிமுறைகளை மீறுவோருக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும் அபாயம்
- நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு நிறுவனம் இலங்கையின் மீன் பதப்படுத்தும் துறையுடன் இணைந்து செயற்பட ஆர்வம்
- சவால்களை வென்றெடுத்த பெருமைக்குரிய கடற்றொழில் சமூகத்திற்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
- கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்





