en banner

WhatsApp Image 2026 04 01 at 08.09.55பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் சுமார் எட்டு மாதங்களாக அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பேரும் நாளை (ஏப்ரல் 02) இலங்கையை வந்தடையவுள்ளனர்.

WhatsApp Image 2026 03 31 at 23.27.23 1இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Mr. Marc-André Franche) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (30) அமைச்சில் நடைபெற்றது.

WhatsApp Image 2026 03 26 at 14.59.39 1நாட்டின் தற்போதைய விசேட சூழ்நிலை குறித்து ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் புதன்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும், கடற்றொழில் துறையுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார்.

WhatsApp Image 2026 03 27 at 10.38.46 1சீன மக்கள் குடியரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அழைப்பிற்கு இணங்க, மார்ச் 25 முதல் 27 வரை பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘ZGC 2026 Forum Annual Conference’ சர்வதேச மாநாட்டில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே கலந்துகொண்டார்.

Dept New Appointments11கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (24) அமைச்சகத்தில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Youtube