en banner

Fisheries Ministry1ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் (State Minister of Agriculture, Forestry and Fisheries) நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பானிய கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

JICA1ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (Island States Ocean Summit - ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2026 05 30 at 12.56.23‘திட்வா’ சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதையும், அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபா) மதிப்பிலான விசேட செயற்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (29) கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் நடைபெற்றது.

 DSC6075.jpgவளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (02) முற்பகல் 10.30 இற்கு வெளியிடப்பட்ட விசேட வானிலை அறிக்கையின்படி, அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிதி கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் அவதானமிக்கது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Ditwah Relief Chilaw4‘திட்வா' (Ditwa) சூறாவளியினால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் 331 சிறு அளவிலான இறால் பண்ணையாளர்கள், மீண்டும் தமது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு 135.7 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (29) சிலாபம் ‘சுதசுன’ மண்டபத்தில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Youtube