en banner

mini 3

சட்ட விரோத கடற்றொழில் நடவடிக்கையினால் இலங்கையில் கடற்றொழில் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிள் தலைமையில் வடக்கு மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2023.03.06ஆந் திகதி கச்சதீவில் நடைபெற்றது.

mini

இந்நாட்டு மீனவர்களினால் சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் பொக்கண வலை மற்றும் வெளிச்சக் கவர்ச்சி போன்ற சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையை முழுமையாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.02.21ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

Oluvil Caption 5

உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,  தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டது.

DSC 0076

நாட்டில் மேற்கொள்ளப்படும் நீர்வாழின செய்கை செயற்றிட்டத்துக்கு ஏற்ற காணிகளை விஞ்ஞான ரீதியில் இனம் கண்டு அச்செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் தேவையற்ற தாமதங்களைத் தடுத்து மக்களிடையே நீர்வாழின செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

DSC 0190

தென் கடலில் இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான கடற்றொழில் நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.01.24ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube