கடற்றொழில் அமைச்சரினால் முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் புதிய கடற்றொழில் சட்டம் இலங்கையில் மீன்பிடி தொழிலுக்கு சர்வதேச நிலைக்கு மேம்படுத்துவதற்கு,

2024.02.11ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பேலியாகொட மீன் விற்பனை சந்தை தொகுதியைக் கண்காணிக்க விஜயம் மேற்கொண்டார். இங்கு மீன் விற்பனை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்ன அடங்கலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சோமாலியா கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட லோரன்சோ புத்தா மீன்பிடிப் படகு மற்றும் 4 மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் 2024.02.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.

முல்லைத்தீவு பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவ சங்கங்களின் அலுவலர்கள் குழுவினர்இ தமது தொழிலை நடாத்துவதில் ஏற்படும் சிக்கல் குறித்து அமைச்சருக்குத் தெரியப்படுத்துவதற்கு 2024.02.06ஆந் திகதி கொழும்பு கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

வட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு 2024இன் வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு பணம் ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை
- ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையில் சந்திப்பு: வட மாகாண அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திட்டங்கள் குறித்து விசேட கவனம்
- கடல்சார் தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிலையான கடல் அபிவிருத்திக்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
- கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க முறையான எரிபொருள் முகாமைத்துவத் திட்டம் நடைமுறைக்கு
- பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன: 10 புதிய அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமனக் கடிதங்களை வழங்கினார்





