
2024.02.11ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பேலியாகொட மீன் விற்பனை சந்தை தொகுதியைக் கண்காணிக்க விஜயம் மேற்கொண்டார். இங்கு மீன் விற்பனை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்ன அடங்கலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவ சங்கங்களின் அலுவலர்கள் குழுவினர்இ தமது தொழிலை நடாத்துவதில் ஏற்படும் சிக்கல் குறித்து அமைச்சருக்குத் தெரியப்படுத்துவதற்கு 2024.02.06ஆந் திகதி கொழும்பு கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

வட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு 2024இன் வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு பணம் ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

சோமாலியா கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட லோரன்சோ புத்தா மீன்பிடிப் படகு மற்றும் 4 மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் 2024.02.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.

தேசிய ரின் மீன் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசின் மூலமாக தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிலாபம் மஹவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள PRF பூட் தனியார் கம்பனியை 2024.01.26ஆந் திகதி கண்காணிக்கச் சென்றபோது இவ்வாறு தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- மாலைதீவு கடல் எல்லையை கடக்கும் பலநாள் மீன்பிடி கலன்களுக்கு கடும் சட்டங்கள்: விதிமுறைகளை மீறுவோருக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும் அபாயம்
- நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு நிறுவனம் இலங்கையின் மீன் பதப்படுத்தும் துறையுடன் இணைந்து செயற்பட ஆர்வம்
- சவால்களை வென்றெடுத்த பெருமைக்குரிய கடற்றொழில் சமூகத்திற்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
- கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்





