கடந்த காலப் பகுதியில் காலநிலை மாற்றம் மற்றும் பருவ பெயர்ச்சிக் காற்று சீராக இல்லாமையாலும், தொடர் மழைக் காலம் காரணமாக பெருமளவு உயரந்திருந்த மீன்களின் விலை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு டீ.பீ. உபுள் 2023.08.16ஆந் திகதி இன்று கடற்றொழில் அமைச்சில் தெரிவித்தார்.
இலங்கை தற்போது முகங்கொடுத்த வரும் கடுiமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டுக்கு டெலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இறால் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (10.08.2023) அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தேரிவித்தார்.
திருகோணமலை உட்பட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பல மீனவ சங்கங்கள் வேதனையடைவதுடன், அதனை நிறுத்துவதற்கு எடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையில் 2023.07.26ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறைக்கு அவுஸ்திரேலியா உதவிக்கரம்; படகுகள் கண்காணிப்பு அமைப்புக்கு தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் உறுதி
- சமாதானம், அன்பு மற்றும் புதிய நம்பிக்கைகள் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
- கிறிஸ்துமஸ் திருநாள் அன்பு, சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- மீன்பிடித் துறைக்கு 765 கோடி ரூபாவுக்கும் அதிகமான வெள்ளச் சேதம்; துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அமைச்சர் சந்திரசேகர் விரிவான மீட்புத் திட்டத்தை அறிவித்தார்.
- அனர்த்தத்தின் பின்னர் கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) ஆதரவு!





