வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு மற்றும் பாதுகாப்புக்காக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் வடக்கு அபிவிருத்திக்காக ரூபா 4900 மில்லியனுக்கும் கூடுதலான நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும், இந்த உதவி எமது நாட்டின் அபிவிருத்திக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென கடந்த தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலையொன்றை வகுத்து அதனை செயற்படுத்த வேண்டுமெனவும் அத்துடன் இதற்காக தேசிய கொள்கைத திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலப் பொருளாதார கொள்கைக்கு அமைவாக நிலைபேறாக உறுதிப்படுத்தி இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழில் தேசிய பொருளாதாரத்துக்கு பிரதான பங்களிக்கும் இடமாக மாற்றுவதற்கான இலக்குடன் பரிந்துரையை வழங்குவதற்கு பொறியியலாளர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்களின் தலைமையில்; நிபுணத்துவ குழுவொன்றை மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக பொறியியலாளர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்கள் நியமிககப்பட்டுள்ளதுடன், இவர் முதலீட்டு சபையின் முன்னாள் தலைவராவார்.
.
இலங்கை கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு அரசு இலங்கை அரசிடம் கோரியிருந்தாலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அதனை நிராகரித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரான்ஸ் துகதுவர் திரு Jean Francois Pactet ஆகியோர்களுக்கிடையே கூட்டமொன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இடமிருந்து 50 TAB கருவிகள்: கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்