திட்வா (Ditwah) மற்றும் வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 226 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான நிதி நிவாரணங்களை வழங்கும் அரச நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (23) நாரஹேன்பிட்டியில் உள்ள கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மீனவர்களுக்கு நிதி உதவிக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அண்மையில் ஏற்பட்ட 'திட்வா' (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களுக்கும், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி. ட்ரின் தி டாம் (Ms. Trinh Thi Tam) அவர்களுக்கும் இடையில் இன்று (16) அமைச்சில் நடைபெற்றது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்று (14.01.2025) விஜயம் மேற்கொண்டார்.
நட்டமடையும் நிறுவனத்தை, இலாபம் ஈட்டும் தேசியச் சொத்தாக மாற்றுவேன் என பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதியுரை

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
- தென் கரையோரப் பிரதேசம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு: கடற்றொழில் அமைச்சினால் விரிவான விழிப்புணர்வு
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் புதிய பாதையில்; புத்தாண்டுக்கு சலுகை விலையில் மீன் வழங்க நடவடிக்கை
- சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வழிகாட்டுதல்கள் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்
- சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அமைச்சின் விசேட அறிவிப்பு
- "மீன்பிடித் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெரும் நிதி; அதிகபட்ச வினைத்திறனுடன் பணியாற்றுங்கள்" - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்





