இந்நாட்டு கருவாடு உற்பத்தியின் தரத்தை உயர்த்தி, சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி அமைச்சு கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
அவுஸ்திரேலிய பொதுநலவாய ஆளுநர் நாயகம் சாம் மோஸ்டின், இலங்கைக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பால் (IOM) முன்னெடுக்கப்படும் இலங்கை கப்பல் கண்காணிப்பு அமைப்பின் (VMS) செயற்பாட்டைக் கண்காணிப்பதற்காக மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய "Aqua Livelihood" திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இன்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

பத்து வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின்னர் நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை இலக்காகக் கொண்ட "தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு - 2025", கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர், ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (04) பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகள்
- பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை
- ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையில் சந்திப்பு: வட மாகாண அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திட்டங்கள் குறித்து விசேட கவனம்
- கடல்சார் தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிலையான கடல் அபிவிருத்திக்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
- கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க முறையான எரிபொருள் முகாமைத்துவத் திட்டம் நடைமுறைக்கு
- பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன: 10 புதிய அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமனக் கடிதங்களை வழங்கினார்





