en banner

DRYFISH 2025.08.07 42இந்நாட்டு கருவாடு உற்பத்தியின் தரத்தை உயர்த்தி, சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி அமைச்சு கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

1.WhatsApp Image 2025 08 09 at 17.08.39அவுஸ்திரேலிய பொதுநலவாய ஆளுநர் நாயகம் சாம் மோஸ்டின், இலங்கைக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பால் (IOM) முன்னெடுக்கப்படும் இலங்கை கப்பல் கண்காணிப்பு அமைப்பின் (VMS) செயற்பாட்டைக் கண்காணிப்பதற்காக மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

WhatsApp Image 2025 08 05 at 17.18.05தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய "Aqua Livelihood" திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இன்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 08 06 at 19.42.09இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

IMG 3532 min

பத்து வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின்னர் நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை இலக்காகக் கொண்ட "தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு - 2025", கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர், ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (04) பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

Youtube