
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (மே 8, 2025) அமைச்சில் நடைபெற்றது. இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி அன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.
மதுரங்குளியில் உள்ள Ocean Food தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓஷன் ஸ்டார் ஜாக் மெக்கரல் டின் மீன்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக கொள்கலன்களில் ஏற்றுவது, 2025 மார்ச் 29 அன்று தொழிற்சாலை வளாகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில் நடைபெற்றது.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கொக்கல வாவியில் 60,000 மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிகழ்வு கத்துலுவ குருக்கந்த படகுத்துறையில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றது.
சமீபத்திய செய்திகள்
- பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை
- ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையில் சந்திப்பு: வட மாகாண அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திட்டங்கள் குறித்து விசேட கவனம்
- கடல்சார் தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிலையான கடல் அபிவிருத்திக்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
- கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க முறையான எரிபொருள் முகாமைத்துவத் திட்டம் நடைமுறைக்கு
- பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன: 10 புதிய அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமனக் கடிதங்களை வழங்கினார்





