ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹூங்கம ஹாத்தகல பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேச இறால் செய்கை செயற்றிட்டத்துக்கு காணி ஒதுக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2023.10.05ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கையில் மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்கு இந்திய உயர்ஸ்தானிகரின் தலையீட்டுடன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் திரு சத்யஞ்சல் பாண்டே அவர்களுடன் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசுடன் தொடர்புடைய மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளும் அறிஞர்கள் குழுவொன்று கடந்த 23ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், நாரா நிறுவனம் நக்டா ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு வார காலத்துக்கும் மேலாக இலங்கை முழுவதிலுமுள்ள 15 மீனவ மாவட்டங்களுக்கும், நன்னீர் துறை சார்ந்த மாவட்டங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்து அவர்களால் பெறப்பட்ட தரவுகள் மற்றும் அவதானிப்புகள் தொடர்பான அறிக்கை 2023.10.02ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க அவர்கள், கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கௌரவ கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பிரகாரம், கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களத்தினால் கடற்றொழில் துறையின் நலன் கருதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்தை நீண்டகாலம் பாதுகாத்தும் முகாமைத்துவம் செய்தும் நிலைபேறான அறுவடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடைமுறையிலுள்ள 1996ம் ஆண்டின் 02ம் இலக்க கடற்றொழில் நீரியல் வளச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, புதிய கடற்றொழில் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“திறமையின்மை காரணமாக பின்னடைவு ஏற்பட்டிருந்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போதைய நவீனத்துவத்துக்கு ஏற்றவாறு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை மிக மகிழ்ச்சியளிக்கிறது. கடற்றொழில் கூட்டுத்தாபன மீன் விற்பனை நிலையங்கள் தற்போது உயர்ந்த தரத்துடன் நிறுவப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் பற்றி மீனவர்கள் மற்றும் நுகர்வோர் மனங்களில் இருக்கும் மோசமான பிம்பத்தை எம்மால் மாற்ற முடியும்”
சர்வதேச மீனவ தினத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆந் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் களுத்துறை மாவட்டத்தில் நடைபெற்றதுடன், இம்முறை இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடாத்துவது பொருத்தமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த அவர்கள் முன்மொழிந்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
- ධීවර වරාය සේවා නංවාලීමට කඩිනම් පියවර: 'කාර්යක්ෂම සේවාවක් අපේ ප්රමුඛතාවයයි' - අමාත්ය; 'මාස 6කින් පෙනෙන වෙනසක්' - නියෝජ්ය අමාත්ය
- මොනරාගල ධීවර ගැටලු විසඳීමට විශේෂ සම්බන්ධීකරණ හමුවක්: වනජීවී කලාපවල ධීවර දැල් එලීමේ කාලසීමාව දීර්ඝ කිරීමට අවධානය
- ඉස්සන් කර්මාන්තය සඳහා නව දැක්මක්: 2026 ඉලක්ක සපුරාලීමට රජය සහ අපනයනකරුවන් එක්වෙයි.
- கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.