தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி வழங்கும் அதிகார சபை (Nயூஐவூயூ) மற்றும் கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து கடற்றொழில் கைத்தொழிலில்இ அலங்கார மீன் கைத்தொழிலில் மற்றும் நன்னீர் மீன்பிடி கைத்தொழில் ஈடுபடும் தரப்பினர்களுக்கு தேவையான தொழில் பயிற்சிஇ தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில்சார் சான்றிதழ் வழங்கும் வேலைத் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் 2021.01.26 ஆந் திகதி கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களின் தலைமையில் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
இங்கு 2021ஆம் ஆண்டுக்காக 3000 நபர்களுக்கு இப்பயிற்சி இலவசமாக (Nயூஐவூயூ) நிறுவனத்தின் மூலம் வழங்குவதற்கு தொழில் வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கும் கடற்றொழில் திணைக்களம்இ நீர்வாழ் உயிரினச் செய்கை அதிகார சபை மற்றும் நாரா ஆகிய நிறுவனங்களின் மூலம் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்துக்கு (Nயூஐவூயூ) நிறுவனம் செலவிட்ட தொகை ரூபா 375 இலட்சமாகும்.
இச்சந்திப்பில் (Nயூஐவூயூ) நிறுவனத்தின் தலைவர் திரு நளீன் தரங்க அவர்களை முன்னிலையாகக் கொண்டு இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்இ உதவிப் பணிப்பாளர் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு ஜயந்த சந்திரசோம ஆகியோர்கள் அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.