கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (நாரா) புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு துஷாரா சமிந்த லொக்குகுமார அவர்கள் 2020.01.30ஆந் திகதி முற்பகல் சுபநேரத்தில் தமது பதவிக்குரிய கடமைகளை ஆரம்பித்தார்.
கடற்றொழில் துறைக்குள் ஆய்வு நடவடிக்கை இவ்வாறு பரிசோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளும் நிறுவனங்களுள் ஒன்றான நாரா நிறுவனம் கடற்றொழில் கைத்தொழிலுக்கு நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக திறமையான சேவையை முன்னெடுத்து வருகின்றது.
இங்கு இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் ஊடக செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க மற்றும் நாரா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் மனித வளங்கள் பணிப்பாளர் திரு பிரசாத் ரணசிங்க ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.