அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம் குடா சுற்றுலாப் பிரதேசத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அப்பகுதியில் தற்போதுள்ள சிறிய படகுத் துறையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை கடற்படை, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம், பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுற்றுலாச் சபை மற்றும் பிற தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். அத்துடன், இப்பகுதியிலுள்ள மீனவ சமூகத்தினரும், அம்பாறை மாவட்ட மீன்பிடி மாவட்ட அலுவலக அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
தற்போது அதிக சுற்றுலாப் பயணிகள் கூடும் பகுதியில் சிறிய படகுகளை நிறுத்துவதால் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகளை அகற்றி, அப்பகுதியை முழுமையாக சுற்றுலாப் பயணிகளுக்கான கடற்கரையாக மேம்படுத்துவதே இதன் எதிர்பார்ப்பாகும். அதன்படி, தற்போதுள்ள சிறிய படகுத்துறையை ஒரு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, மீனவ சமூகத்திற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய படகுத்துறையை நிறுவுவதே எதிர்பார்ப்பாகும். இதன் கீழ், இந்த சுற்றுலாப் பகுதி பெருமளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மீன்பிடித் துறைமுகத்தில் நிறுவ எதிர்பார்க்கப்படும் வசதிகள்:
மீனவர்களுக்குத் தேவையான வலைப் பழுதுபார்க்கும் மையங்கள், மீனவர்களின் படகு எஞ்சின்களைப் பாதுகாக்கும் இடங்கள், அடிப்படை சுகாதார வசதிகள், நீர் வசதிகள், பாதுகாப்புக்கான கட்டிடங்கள், மீன் விற்பனைக்கான ஏல மண்டபங்கள் மற்றும் மீன்பிடி ஆய்வாளர் அலுவலகம் உட்பட அனைத்து அத்தியாவசிய அடிப்படை வசதிகளையும் புதிதாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.