இந்திய தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் கடலட்டை செய்கை நிலத்துக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை இனப்பருக்கம் செய்தல் மற்றும் கடலட்டை இனப்பெருக்க நிலையங்களை நிர்மாணிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தின் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தில் இன்று (2022.10.14) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் இந்திய தனியார் முதலீட்டாளர்களின் துhர நோக்கு மற்றும் நவீன தொழில்நுட்;பத்தைப் பயன்படுத்தி கடலட்டை இனப்பெருக்க மையம்; மற்றும் குஞ்சு பெருக்கம் சம்பந்தமான மையம் குறித்து விரிவாக ஆராய்ந்து பார்க்கப்பட்டதுடன், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்களுக்கு உறுதியான பொருளாதாரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த கடலட்டை செய்கையின் அபிவிருத்திக்கு இந்திய தனியார் முதலீட்டாளர்களின் உதவியைப் பெற்று கடலட்டை செய்கைக்கு சர்வதேச ரீதியில் தேவை அதிகமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறுவது விசேட அம்சமாகும்.
மன்னார் ஓலைத்தொடுவாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடலட்டை இப்பெருக்க மையத்தின் பணிகளை நேரில் பார்வையிட்ட இந்திய தனியார் முதலீட்டாளர்கள் இந்த கடலட்டை உற்பத்திக் கொள்ளளவை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடியது விசேட அம்சமாகும்.