கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரான்ஸ் துகதுவர் திரு Jean Francois Pactet ஆகியோர்களுக்கிடையே கூட்டமொன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சினால் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் புதிய கடற்றொழில் ஒழுங்குவிதிகளின் வரைவு சம்பந்தமாக இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அது இந்நாட்டு மீனவ மக்கள் உயர் மீன்பிடி கைத்தொழிலுக்கு வழிநடத்தும் சர்வதேச மீன்பிடி சட்டதிட்டங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என அமைச்சர் துhதுவசை; சந்தித்து சுட்டிக் காட்டினார். இந்நாட்டு சில மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் இங்கு அமைச்சர் பிரான்ஸ் துhதுவருடன் கலந்துரையாடினார். குறிப்பாக இந்நாட்டு மீனவர்களை வலுவூட்டுவதற்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவிகளை வழங்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்ன மற்றும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோர்கள் அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.