18 June 2026
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் துணைநிற்காது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை கிராமிய கடற்றொழில் அமைப்பிற்காக நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக மீனவர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இப்பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மூலம் மீனவர்கள் தங்களது மீன்பிடி உற்பத்திகளை தரமான முறையில் பாதுகாத்து சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு செயல்பட்ட சூழ்நிலைகள் இருந்தன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்காது. சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என அவர் தெரிவித்தார்.

மேலும், சமூகத்தில் பரவலாக காணப்பட்ட போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதில் கணிசமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதாக தெரிவித்த அவர், அவற்றை கட்டம் கட்டமாக தீர்த்து வைப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

“மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும், அவர்களின் தொழிலை நவீனமயப்படுத்துவதும் எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியாது. எனினும், அரசாங்கம் என்ற பொறுப்புடன் அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு கட்டம் கட்டமாக தீர்த்து வைக்க உறுதியாக செயற்பட்டு வருகின்றோம்” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம், இரணைப்பாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடற்றொழில் துறையின் உற்பத்தித் திறன் மற்றும் வருமான உயர்விற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

Share

Latest News

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதி மேலும் கொந்தளிப்பு: புத்தளம் முதல் பொத்துவில் வரை சிறு மற்றும் ஒருநாள் மீன்பிடிக் கலன்களுக்குத் தற்காலிகத் தடை
சீநோர் நிறுவனத்திற்கு 2 இலட்சத்து 34 ஆயிரம் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வெற்றி: மொரிஷியஸ் நாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட "CAPTAIN C" படகை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்
புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை - கடற்றொழில் பணிப்பாளர் நாயகம்
🟥 Update 6.20 P.M.கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்கள் தெற்கு நோக்கி நகர்கின்றன: மீன்பிடிக் கலன்களுக்கு அவசர எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கக் கடற்படை மற்றும் விமானப்படை கூட்டு நடவடிக்கை: தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை
கொழும்புக்கு மேற்கே கடற்பரப்பில் சரக்குக் கப்பலிலிருந்து 17 கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்துள்ளன: மீனவ சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை!
1 2 3

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன