Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
19 June 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார்.

இதன்போது முதலாம் கட்டமாக ரூபா 1.800 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.640 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், தலா ரூபா 480,000.00 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 03 படகுகளும் ( நெடுந்தீவிற்கு 02 படகுகளும், காரைநகருக்கு 01 படகுகள்), முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன், காரைநகர் பிரதேச செயலாளர் நிரஞ்சனா நவரத்தினம், காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை பணிப்பாளர் திரு.றோகன, சீ நோர் படகுதிருத்தும் நிறுவனத்தின் தலைவர் திரு. வசந்தமானபெரும, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. அகிலன், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சுதாகர், மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. ரமேஸ்கண்ணா, திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share

Latest News

இலக்குவைக்கப்பட்ட நிதித் தடைகள் (TFS) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சகத்தில்
இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் இந்தியாவில் ஆரம்பமானது.
தித்வா புயலால் சேதமடைந்த காக்கைத்தீவு சாவர்க்காட்டு மீன்பிடித் தளம் புனரமைக்கப்படவுள்ளது.
ஒலுவில் துறைமுகத்தை மீளச் செயற்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை - மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதி அமைச்சர் ரத்ன கமகே
COFI37 அமர்வில் இலங்கையின் மீன்வளக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய முன்மொழிவுகள். டிஜிட்டல் மாற்றம், தரவு முகாமைத்துவம் மற்றும் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை வலியுறுத்தல்
இலங்கை மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் இந்தியப் பயணம் – நிர்வாகம் மற்றும் பொருளாதார வலுவூட்டல் தொடர்பில் சிறப்புப் பயிற்சி
1 2 3 10